முஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு முன்­பாக தொங்­க­விட்டப்பட்ட பன்­றி­களின் தலை­கள்: காரணம் என்ன?

Published By: Digital Desk 8

22 Jul, 2019 | 10:07 AM
image

(நீர்­கொ­ழும்பு நிருபர்)

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் சேத­ம­டைந்த நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டி  புனித செபஸ்­தியார் தேவா­லயம் நேற்று  ஞாயிற்­றுக்­கி­ழமை காலை திறக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில், கட்­டு­வாப்­பிட்­டி தேவா­ல­யத்­திற்கு அண்­மித்­த­தாக உள்ள மீரி­கமை பிர­தான வீதியில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான சில கடை­க­ளுக்கு முன்­பாக பன்­றி­களின் தலை­களை இனந்­தெ­ரி­யாத நபர்கள் தொங்­க­விட்­டுள்­ளனர். 

மீரி­கமை வீதி, மைமா­கொடை பகு­தியில் உள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான மூன்று கடை­களின் முன்­பாக இவ்­வாறு பன்­றி­களின் தலைகள் கட்டித் தொங்­க­வி­டப்­பட்­டி­ருந்­தன.

நேற்­று­முன்­தினம் சனிக்­கி­ழமை  இந்த பிர­தே­சத்தில் உள்ள முஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு சென்ற இனந்­தெ­ரி­யாத குழு­வொன்று நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை  கட்­டு­வாப்­பிட்டி தேவா­லயம் மீண்டும் திறக்­கப்­ப­ட­வுள்­ளதால் கடை­களை மூட­வேண்டும் என்று கூறி அது­தொ­டர்­பாக கடிதம் ஒன்­றையும் கொடுத்துச் சென்­றுள்­ளனர்.

இந்­நி­லையில், நேற்றுக் காலை  கடை உரி­மை­யாளர் ஒரு­வ­ருக்கு அவரின் கடையின் முன்­பாக பன்றின் தலை தொங்­க­வி­டப்­பட்­டுள்­ள­தாக ஒருவர் தகவல் வழங்­கி­யுள்ளார். கடை உரி­மை­யா­ளர்கள் அதனை பார்க்கச் சென்­ற­போது மூன்று கடை­களின்  வாயில் கத­வு­களில் பன்­றி­களின் தலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளதை கண்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட தையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08
news-image

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது...

2026-07-19 20:31:38
news-image

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை...

2026-07-19 20:19:28
news-image

அனுமதிப் பத்திரமின்றி 1000 பஸ்கள் சேவையில்...

2026-07-19 15:59:20
news-image

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு...

2026-07-19 19:50:35
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55