நிதி அமைச்சின் ஆதரவுடன் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 55 மில்லியன் ரூபா செலவில் கிரிஉல்ல, ஹென்டியகல, ரத்னபால மஹா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலையம், விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் தொழில்நுட்ப கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் அதிகரித்த விதம் தொடர்பில் அண்மையில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டோம். நாம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை 106 சதவீதமாக அதிகரித்துள்ளோம். முதலாம் வகுப்பு ஆசிரியர்களின் ஆரம்ப சம்பளம் 21,750 ரூபாவாகவே காணப்பட்டது. எனினும் தற்போது சிரேஷ்டத்துவத்தின் பிரகாரம் கொடுப்பனவுகளுடன் 81,950 ரூபா வரை முழு சம்பளமாக பெறமுடியும். அதிபர்களின் சம்பளத்தையும் அதேபோன்று அதிகரித்துள்ளோம். அரச ஆசிரியர்களின் ஒய்வூதியம் 2800 ரூபாவில் இருந்து 20,000 ஆக அதிகரித்துள்ளோம். 1000, 2000 ரூபாவுக்காக போராட்டம் நடத்தியோருக்கு தற்போது எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க முடியாது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மனசாட்சியை தொட்டுபார்த்தால் குறித்த வேலைநிறுத்தம் அநியாயம் என்றே உணர்ந்து கொள்வார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM