(செ.தேன்மொழி)
மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பில் முதலாவது சந்தேக நபரான அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் இன்று நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக்கொண்ட போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதேவேளை பிணைமுறி மோசடி தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட எட்டு பேருக்கு மேல் நீதிமன்றத்தின் நீதியரசர்களான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் பிணை வழங்கினர்.
இதன்போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் 10வது பிரதிவாதியான அஜகான் கார்திய புஞ்சிஹேவா ஆகியோர் நீதி மன்றில் ஆஜராகி இருக்கவில்லை என்பதுடன் அவர்கள் சார்பில் சட்டத்தரணிகளும் ஆஜராகியிருக்க வில்லை .
நீதிமன்றில் ஆஜரான ஏனைய எட்டு பிரதிவாதிகளுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதோடு 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 25 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வெளிநாடு செல்ல பிரதிவாதிகளுக்கு தடை விதிக்கப்பட்டது . அவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM