நுளம்பு வலைகள் வழங்கப்படுவதால் அச்சத்தில் மக்கள் !

Published By: Daya

19 Jul, 2019 | 01:37 PM
image

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் இருக்கும் அயல் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் நுளம்பு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இவ்வாறு தற்போது மழை இல்லாத காலத்தில் நுளம்பு வலைகள் ஒரு குடும்பத்திலுள்ளவர்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு முதல் மூன்று நுளம்பு வலைகளை கடந்த இரண்டு தினங்களாக வழங்கி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியிலுள்ளவர்களுக்கு மேலும் சந்தேகங்கள் அதிகரித்துக்காணப்படுகின்றது. இவ்வாறு நோய் தாக்கத்திற்குள்ளானவர்களை எமது பகுதிகளில் கொண்டு வந்து குடியேற்றியுள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், இங்குள்ள நாங்களும் இவர்களுடன் சேர்ந்த இனந்தெரியாத நோய்த்தாக்கத்திற்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட் வாய்ப்புக்கள் காணப்படுகின்றாகவும் அச்சத்திற்குள்ளான மக்கள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறன நோய்த்தாக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவர்கள் அனைவரும் தத்தமது நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியிலுள்ள மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டுக் குறித்து வவுனியா பிராந்திய மலேரியா தடை இயக்க பொறுப்பதிகாரி வைத்தியர் பிரசாத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

அவ்வாறான இனந்தெரியாத நோய்த் தொற்றுக்கள் எவையும் அவர்கள் மீது இனங்காணப்படவில்லை. எமது பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. முகாம் பகுதியிலிருந்து சுமார் 500 மீற்றர் சுற்றளவில் தங்கியுள்ளவர்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  

மலேரியா நோயைத் தடை செய்யும் நடவடிக்கையாக இத்திட்டம் பல கிராமங்களில் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே பூந்தோட்டம், ஸ்ரீநகர் பகுதிகளில் எம்மால் நுளம்பு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் இலங்கையிலிருந்து மலேரியாவை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கையாகும்.  அடப்பன்குளம், எல்லப்பர் மருதங்குளம், நேரியகுளம் போன்ற பகுதிகளுக்கும் இவ்வாறு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் இந்தியாவிலிருந்து வந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். மலேரியா நோயை தடை செய்யும் நோக்குடன் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-13 12:54:39
news-image

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர்...

2025-02-13 13:46:35
news-image

நாடு கடத்தப்பட்டார் இந்தியாவில் தலைமறைவாகியிருந்த சுமித்...

2025-02-13 13:43:14
news-image

ஊடகத்துறையின் விருட்சம் விடைபெற்றுவிட்டது! - பாரதி...

2025-02-13 14:12:46
news-image

யாழில் 13 வயதான மகளை அடித்து...

2025-02-13 12:40:57
news-image

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள்...

2025-02-13 12:54:13
news-image

காதலர் தினம் என்ற போர்வையில் இடம்பெறும்...

2025-02-13 12:02:24
news-image

உலர்ந்த கருவாடு, இஞ்சியுடன் சந்தேநபர்கள் மூவர்...

2025-02-13 12:52:28
news-image

பொருளாதார, முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்த ஐக்கிய...

2025-02-13 11:52:27
news-image

“இதுதான் நீங்கள் வழங்கும் நீதியா? தேசிய...

2025-02-13 11:04:31