(எம்.மனோசித்ரா)
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தினால் கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மாலை 4 மணிமுதல் இந்த வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாளை மாலை 4 மணிவரை ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் தமது போராட்டத்தை தொடரப்போவதாகும் தெரிவித்துள்ளனர்.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அமைச்சரவையில சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இவர்களுக்கு அறிவிக்கப்பட்டபோதிலும் வேலை நிறுத்தம் தொடர்வதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை அடுத்து, அரசினால் கடந்த செப்டெம்பர் மாதம் அமைச்சரவைக்கு சில பரிந்துரைகளை முன்வைக்கப்பட்டன. எனினும், அது குறித்து அமைச்சரவை இதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை .
இதனால் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று தமது கோரிக்கைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ள தொழிற்சங்கத்தினர், அரசாங்கம் எமது அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் பாரா முகமாக செயற்பட்டால் எதிர்வரும் நாட்களில் அனைத்து ஊழியர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கும் தயாராக உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM