மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த எட்டுமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனையைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் ஓட்டமாவடி பழைய மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது அவ்விடத்திலுள்ள குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதியை குறுக்கறுத்து மோட்டார் சைக்கிளை ஒருவர் செலுத்தி வந்துள்ளார்.
அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM