உலக சாரணர் ஜம்போரிக்கு செல்லும் இலங்கை சாரணர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

Published By: Digital Desk 4

16 Jul, 2019 | 03:56 PM
image

அமெரிக்காவில் இடம்பெறும் உலக சாரணர் ஜம்போரியில் பங்குபற்றும் இலங்கை சாரணர் அணிக்கு உத்தியோகபூர்வமாக தேசியக் கொடியை கையளிக்கும் நிகழ்வு இலங்கையின் தலைமை சாரணரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (16) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 

உலக சாரணர் ஜம்போரிக்கு செல்லும் இலங்கை சாரணர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

இதன்போது சாரணர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி இலங்கையின் தனித்துவத்தை உலகிற்கு கொண்டு செல்வதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து சாரணர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி பாடசாலை காலத்தில் தான் ஒரு சாரணராக செயற்பட்டு பெற்றுக்கொண்ட அனுபவங்களை நினைவுகூர்ந்ததுடன் அதில் பெற்ற அனுபவங்கள் ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கும் தனக்கு பெரிதும் உதவியதாக குறிப்பிட்டார். 

குறிப்பாக இந்த ஜம்போரியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க தூதரகத்தினால் விசா கிடைக்கப்பெறாத பிள்ளைகளுக்கு விசாவை பெற்றுக்கொடுக்குமாறு அமெரிக்க தூதுவருக்கு தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

அனைத்து சாரணர்களுக்கும் ஜனாதிபதி இதன்போது வாழ்த்து தெரிவித்ததுடன் அவர்களுடன் குழுவாக புகைப்படத்திற்கும் தோற்றினார். 

24வது உலக சாரணர் ஜம்போரி ஜூலை மாதம் 21ஆம் திகதி முதல் ஒருவார காலத்திற்கு அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவில் நடைபெறுவதுடன் இதில் இலங்கை சாரணர் இயக்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றவுள்ளனர்.

ஜம்போரி காலப்பகுதியில் இலங்கை பற்றிய விசேட சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சாரணர் ஆணையாளரினால் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியினால் இலங்கை அணியின் தலைவர் சர்வதேச ஆணையாளர் சட்டத்தரணி கபில கல்யாண பெரேராவிடம் தேசியக்கொடி கையளிக்கப்பட்டதுடன் தலைமை சாரணர் ஆணையாளர் பொறியியலாளர் மெரின் குணதிலக்க உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08