நான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி!

Published By: Vishnu

16 Jul, 2019 | 02:45 PM
image

மும்பை, டோங்கிரி பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 முதல் 50 பேர் வரை அக் கட்டடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 80 வருடங்கள் பழமைவாய்ந்த மேற்படி கட்டடம் இன்று முற்பகல் 11.40 மணியளவிலேயே இடிந்து வீழ்ந்துள்ளதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கட்டடம்  இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த இடிபாடுகளில் சிக்கிய மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் இதுவரை மீட்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையைத் தொடர்ந்து டோங்கிரி பகுதியில் மழைநீர் தேங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17