கூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை ; சிவசக்தி ஆனந்தன்

Published By: Digital Desk 4

15 Jul, 2019 | 10:25 PM
image

கூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர்  50 மில்லியன் ரூபா வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்  அதனாலே இறுதியாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லையென வினவிய போதே  இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

உண்மையிலே இரண்டு மாதங்களுக்கு முன்பாக அமைச்சர் கபீர் காசிம்  எனக்கு நேரடியாக ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதாவது வவுனியா மாவட்டத்திலே வீதி புனரமைப்பு செய்ய வேண்டிய முன்னுரிமை அடிப்படையில் வீதி திருத்தம் சம்பந்தமாக விபரங்களைத் தருமாறு கோரி இருந்தார். 

ஆகவே இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கபீர் காசிம் அமைச்சர் எனக்கு மட்டுமல்ல கூட்டமைப்பில் இருக்கக் கூடிய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியது போல் சிலவேளைகளில் நானும் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றேன் என்ற நம்பிக்கையில் அனுப்பினாரோ தெரியவில்லை.

அவர் அனுப்பிய கடிதத்திற்கு நான் இந்த மாவட்டத்திற்கு சில வீதி திருத்தம் செய்ய வேண்டிய சில இடங்களின் விபரங்கள் அனுப்பி இருக்கின்றேன். ஆகவே அது அனுமதிக்கப்படுமா? நிதி வருமா? வராதா? என்பது எனக்கு தெரியாது. இந்த வீதி அமைப்பதற்காக நான் பாதை விபரங்கள் கொடுத்ததற்காக நான் கூட்டமைப்பு அரசாங்கத்தை பாதுகாத்தது போல் எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாக்கிற வேலைக்கு போகவில்லை.

அமைச்சருடைய நிதி கிடைக்குமாக இருந்தால் நான் கொடுக்கப்பட்ட ஒரு சில கிலோ மீற்றர் வீதிகள் திருத்தப்படும் அவ்வளவே என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08