கிழக்கில் சமகால தமிழர் அரசியலின் செல்நெறிப்போக்கு மற்றும் அரசியல் கலாசாரத்தை தீர்க்கமாக புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றக் கூடிய தமிழர் பரப்பின் அரசியற் கட்சிகளை இணைத்து கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் சமூகப் பொருளாதார, பண்பாட்டியல் இலக்குகளை அடைவதற்கான ஓர் பாரிய அரசியற் கூட்டமைப்பை உருவாக்கி காத்திரமாகப் பயணிப்பதற்கான ஓர் பூர்வாங்க கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
கிழக்கின் ஈழத்தமிழரின் அரசியற் போக்கை நெறிப்படுத்த தேசப்பற்றுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் அபிலாஷையை முன்னிறுத்தி ஈழத் தமிழர் பேரவை குறிப்பிட்ட கலந்துரையாடலுக்கான அழைப்பை விடுத்திருந்தது.
ஈழத்தமிழர் பரப்பில் இயங்குகின்ற 9 அரசியல் கட்சிகளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், மக்கள் முற்போக்குக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் , வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்குத் தமிழர் அமைப்பு, தமிழர் சிவில் சமூகங்களின் கூட்டமைப்பு, ஐனநாயகத் தமிழர் ஆகிய அமைப்புகளும் கலந்து கொண்டன.
ஒன்றிணைந்த வட கிழக்கு தமிழரின் பூர்வீக தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டு, சமகாலத்தில் கிழக்கில் வாழும் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் இருப்பை வலுப்படுத்த ஓர் அரசியல் கூட்டமைப்பை உருவாக்குவதற்கும் அதில் காத்திரமாக இணைந்து பணியாற்றவும் பங்குபற்றிய அனைத்து அரசியல் தரப்புகளும் இணங்கியதோடு மேற்கொண்டு கூட்டணியை அமைப்பது சம்பந்தமாக காரியமாற்றவும் கட்சிகள் இணங்கியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM