(செ.தேன்மொழி)
பேருவளைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பேருவளை – அளுத்ஹேன , மாகல்கந்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, சந்தேக நபர் உயிரிழந்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் மாகல்கந்த - மங்கொன பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கரன்னாகொடகே ஜனக ஜீவந்த என்பவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM