விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சம்பியன் ஆனார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த முதலாம் திகதி லண்டனில் ஆரம்பமானது.
இதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மகளீர்க்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சிமோனா ஹலேப் சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற நிலையில், நேற்றைய தினம் ஆடவர்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச்சை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் எதிர்கொணடார்.
சுமார் 4 மணி 55 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7–6 (7–5), 1–6, 7–6 (7–4), 4–6, 13–12 (7–3) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
ஜோகோவிச் விம்பிள்டனில் வாகை சூடுவது இது 5 ஆவது தடவையாகும். ஏற்கனவே 2011, 2015, 2015, 2018–ம் ஆண்டுகளிலும் பட்டம் வென்று இருந்தார்.
அத்துடன் மொத்தத்தில் ஜோகோவிச் கைப்பற்றிய 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM