அன­கொண்டா வாயில் சிக்கி, கடு­மை­யாகப் போரா­ட்டத்தின் பின்னர் முழுமையாக இரையாகிய முதலை..!

Published By: J.G.Stephan

14 Jul, 2019 | 03:28 PM
image

அவுஸ்­தி­ரே­லி­யாவின் குயின்ஸ்­லாந்து மாநி­லத்தில், மலைப்­ப­கு­தி­யொன்றில் மிகப்­பெ­ரிய முத­லையை அன­கொண்டா வகை மலைப்­பாம்பு முழு­வ­து­மாக விழுங்­கி­யுள்­ளது.

குயின்ஸ்­லாந்து மாநி­லத்தில் மவுண்ட் இசா பகு­தியில் அமைந்­துள்ள மூன்­தாரா ஏரி­யிலே இச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

அங்­குள்ள  ஏரியில் ஏரா­ள­மான நன்னீர் முத­லைகள் வசித்து வரு­கின்­றன. அந்த ஏரியில் அன­கொண்டா வகை பாம்­புகள் இருப்­பது மிகவும் அரி­தா­னது. என்­ற­போ­திலும், அவுஸ்­தி­ரே­லி­யாவின் மிகப்­பெ­ரிய பாம்­பாக கரு­தப்­படும் ஆலிவ் அன­கொண்டா மலைப்­பாம்­புகள் அங்கு காணப்­ப­டு­கின்­றன. ஆலிவ் மலைப்­பாம்­புகள் ஏறக்­கு­றைய 13 அடி­வரை வள­ரக்­கூ­டி­யவை. இவ் வகை பாம்­புகள் பற­வைகள், மீன்கள், சிறிய விலங்­கி­னங்­களை முழு­மை­யாக விழுங்கும் தன்மை கொண்­ட­வை­யாகக் காணப்­ப­டு­கின்­றன.

இருந்தும் இப் பாம்­பா­னது மிகப் பெரிய முத­லையை முழு­மை­யாக விழுங்­கி­யுள்­ளமை அனை­வ­ரையும் ஆச்­ச­ரி­யத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

இச் சம்­பவம் தொடர்பில் சம்­ப­வத்தை நேரில் பார்த்த புகைப்­ப­ட­வி­ய­லா­ள­ரான மார்ட்டின் முல்லர் குறிப்­பி­டு­கை­யில், தனது உயிரைக் காப்­பாற்­றிக்­கொள்ள அந்த முதலை, அன­கோண்­டா­விடம் கடு­மை­யாகப் போரா­டியும், அன­கொண்­டாவின் பிடியில் இருந்து தப்­பிக்க முடி­ய­வில்லை எனவும், முடிவில் அன­கொண்­டாவின் வாய்க்குள் முதலை இரை­யா­ன­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

மேலும், மிகப்­பெ­ரிய முத­லையை பாம்பு மெல்ல, மெல்ல தனது உடலை இரப்பர் போல விரித்து, தனது தாடையை விரித்து விழுங்கும் காட்­சியை மார்டின் வீடி­யோ­வாக பதிவு செய்­த­து­டன, புகைப்­ப­ட­மா­கவும் எடுத்­துள்ளார்.

ஏறக்­கு­றைய 5 மணி­நேரம், அந்த முதலையை முழுவதுமாக பாம்பு விழுங்கியதாகவும், அங்கிருந்து தனது உடலை அசைக்க முடியாமல் மெதுவாக நகர்ந்து  சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right