பெற்றெடுத்த சிசுவை, குழிதோண்டி புதைத்துவிட்டு மரணமான தாய்: 3 பிள்ளைகளுடன் நிர்க்கதியான தந்தை - கொட்டகலையில் சம்பவம்

Published By: J.G.Stephan

14 Jul, 2019 | 12:05 PM
image

கொட்டகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யுலிபில்ட் தோட்ட பகுதியில், புதைக்கப்பட்ட நிலையில், ஆண் சிசு ஒன்றின் சடலத்தை பொலிஸார் தோன்றி எடுத்துள்ளனர். அத்தோடு, குறித்த சிசுவின் தாயாரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஹட்டன் நீதிமன்ற நீதவான் தலைமையில் விசாரணைகள் மேற்கொண்டதன் பின்னரே நேற்று(13.07.2019) குறித்த ஆண் சிசுவின் சடலம் மீட்கபட்டது. 

மேலும், குறித்த சிசுவின் தாய் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ள குறித்த தாயின் சடலத்தை சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரீசோதனை மேற்கொண்ட போதே இறந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் ஊடாக ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

கொட்டகலை யுலிபில்ட் தோட்ட பகுதிக்கு சென்ற பொலிஸார் குறித்த பெண் வீட்டின் அறையில் குழந்தை ஒன்றை பிரவேசித்து வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளதாகவும், குறித்த பெண்ணுக்கு அதிக குருதி வெளியேறிதை அடுத்து குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டும் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

மேலும், குறித்த பெண்ணின் வீட்டின் அறையினுள் குறித்த பெண் அணிந்திருந்த இரத்த கறைகள் கொண்ட ஆடைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணின் கணவர் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும், 39 வயதுடைய 03 பிள்ளைகளின் தயாரான ஆர்.வசந்தகுமாரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு 12, 07 ஆகிய வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளும் 05 வயதில் ஒரு ஆண் பிள்ளையும் இருப்பதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04