ஜா - எலயில் கோர விபத்து ; ஒருவர் பலி - போராட்டத்தில் மக்கள், ரயில் சேவை ஸ்தம்பிதம் 

Published By: Digital Desk 4

12 Jul, 2019 | 05:42 PM
image

ஜா - எல ஏக்கலப் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற ரயில் விபத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜா-எல ஏக்கலப் பகுதியின் துடெல்ல ரயில் நிலையத்திலிருந்து சுமார்  500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதியதிலேயே குறித்த  விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் துடெல்லப் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத் தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயட்சிக்கும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைக் காணப்படுவதினாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதியில் ஒன்றுகூடிய அப்பகுதி மக்கள் குறித்த ரயிலை போகவிடாது தடுத்து வைத்துள்ளதோடு குறித்த பாதுகாப்பற்ற கடவைக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து பொலிஸாரும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளும் குறித்த மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் ஒரு மணி நேரமாக குறித்த ரயிலை தடுத்து வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் நாட்டின் பல பகுதிகளுக்குமான ரயில் சேவை முற்றாகப் பதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பகுதியில் இத்துடன் ஐந்து மரணங்கள் பாதுகாப்பான ரயில் கடவை இல்லாமையினால் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08