சத்தீஸ்காரில் பால்ராம்பூர் மாவட்டத்தில் பஸ் ஒன்று பாலத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கார் மாநில தலைநகர் ராம்பூரில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் காத்வாவிற்கு நேற்றுமுன்தினம் இரவு சென்ற தனியார் சொகுசு பஸ் ஒன்று இரவு 10:30 மணியளவில் தால்தோவா என்ற இடத்தில் சிறிய ஆற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
இது தொடர்பில் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த பஸ் சாரதி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக பஸ்ஸை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளார். அப்போது பஸ் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த சிறிய ஆற்றில் விழுந்துள்ளது.
பஸ் விழுந்த வேகத்தில் இரண்டு, மூன்று முறை புரண்டு உள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்துவிட்டனர். காயம் அடைந்தவர்களில் 16 பேரது நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் அம்பிகாபூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்த 37 பேர் பால்ராம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண் கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM