(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டுவருவதென்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு தரப்பு உறுப்பினர்களின் கையொப்பம் வேண்டும். எம்மிடம் ஆறு பேர் உள்ளனர். ஆகவே ஐக்கிய தேசிய கட்சியின் 75 உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கையொப்பமிட்டு கொடுத்தால் ஜனாதிபதிக்கு எதிராக நாம் குற்றப் பிரேரணையை கொண்டுவர தயாரென ஜே.வி.பி. யின் தலைவர் அனுரகுமார திசாநாயக நேற்று சபையில் தெரிவத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர் சமிந்த விஜயசிறி " மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளது ஆனால் இந்த தாக்குதலில் பிரதான குற்றவாளியாக அல்லது பொறுப்பை உணராது செயற்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக பிரேரணை ஒன்றை கொண்டுவராது பிரதமருக்கு எதிராக கொண்டுவந்துள்ளது" என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக :-
இந்த தாக்குதலில் பொருப்பின்மையாக செயற்பட்டவர் ஜனாதிபதி என எமக்கும் தெரியும். ஆனால் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முடியாது. அவருக்கு எதிராக குற்றப்பிரேரணையே கொண்டுவர முடியும். குற்றப்பிரேரணையை கொண்டுவர வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு உறுப்பினர்களின் கையொப்பம் வேண்டும். அதாவது 75 உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும். ஜே.வி.பி. யாக நாம் 6 உறுப்பினர்கள் மட்டுமே சபையில் உள்ளோம். ஆகவே ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்றினை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியின் 75 உறுப்பினர்களின் கையொப்பத்தை நீங்கள் பெற்றுக்கொடுத்தால் நாம் குற்றப்பிரேரணையை கொண்டுவர முடியும் என்றார்.
இதன்போது பதில் தெரிவித்த சமிந்த விஜயசிறி எம்.பி:- உங்களின் 6 பேருடன் என்னையும் இணைந்துக்கொள்ளுங்கள் இப்போது 7 பேர் உள்ளோம். அப்படியென்றால் இன்னும் 68 உறுப்பினர்களின் கையொப்பம் தேவைப்படுகின்றது என்று கூறி சிரித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM