மோசடிகளை ஒழிப்பதாகக் கூறும் ஜனாதிபதிக்கு மத்திய வங்கி ஊழலை தடுக்க முடியாமல் போனது ஏன் - எதிர்க்கட்சி சாடல்

Published By: R. Kalaichelvan

11 Jul, 2019 | 03:52 PM
image

(எம்.மனோசித்ரா)

ஊழல் மோசடிகளை ஒழிப்பதாகக் கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரு மாதத்திலேயே மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்டது.

ஊழலை ஒழிப்பதாகக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆட்சியின் கீழ் இடம்பெற்ற இந்த பாரிய ஊழலை தடுக்க முடியாமல் போனது என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நான்கு வருடங்களாகியும் அவ்வாறு எதையுமே செய்யவில்லை. மாறாக மஹிந்த அரசாங்கத்தை குறை கூறுவதையே பிரதான வேலையாகச் செய்து கொண்டிருந்தார்கள். 

தமது ஊழலை மறைத்து ஏனையோர் மீது பழிசுமத்திக் கொண்டிருந்த இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல்களை கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததிலிருந்து நாம் வெளிப்படுத்தி வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53