(எம்.மனோசித்ரா)
ஊழல் மோசடிகளை ஒழிப்பதாகக் கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரு மாதத்திலேயே மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்டது.
ஊழலை ஒழிப்பதாகக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆட்சியின் கீழ் இடம்பெற்ற இந்த பாரிய ஊழலை தடுக்க முடியாமல் போனது என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நான்கு வருடங்களாகியும் அவ்வாறு எதையுமே செய்யவில்லை. மாறாக மஹிந்த அரசாங்கத்தை குறை கூறுவதையே பிரதான வேலையாகச் செய்து கொண்டிருந்தார்கள்.
தமது ஊழலை மறைத்து ஏனையோர் மீது பழிசுமத்திக் கொண்டிருந்த இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல்களை கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததிலிருந்து நாம் வெளிப்படுத்தி வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM