(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
பயங்ரவாத தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தவறாக பார்க்கக்கூடாது. அனைத்து முஸ்லிம் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனாலும் சஹ்ரான்களை உருவாக்கிவர்களை இல்லாமலாக்கவேண்டும். அத்துடன் மத்திய நிலையில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து அவர்களையும் அந்த அடிப்படைவாத கூட்டத்துக்குள் தள்ளிவிடாமல் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதமலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரசாங்கமும் அமைச்சர்களும் அறிந்துகொண்டிருந்ததாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார். அவ்வாறு யாரும் அறிந்திருக்கவில்லை. எமது பாதுகாப்பு பிரிவினர் அதுதொடர்பில் எமக்கு அறிவுறுத்தி இருக்கவில்லை. அத்துடன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முந்திய புதன் கிழமை நான் திருகோணமலையில் இருந்தேன்.
அப்போது பேராயர் ஆசிறிபெரேரா என்னுடன் தொடர்புகொண்டு, அனுராதபுரத்தில் மெதடிஸ்த பள்ளிக்கு கல் அடிக்கின்றனர். இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டார். மறுநாள் வியாழக்கிமை நான் பேராயர், பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதமருடன் கலந்துரையாடலை ஏற்பாடுசெய்தேன். அதன்போது அவர்கள் மெதடிஸ்த பள்ளிக்கு கல் அடிப்பது தொடர்பாக கலந்துரையாடினர்.
இதுதொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் டுவிட்டர் அறிவிப்பொன்றை மேற்கொண்டு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் ஏனெனில் மறுநாள் பெரிய வெள்ளிக்கிழமை வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினமாகும் என அறிவுறுத்தியிருந்தோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM