அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திற்கருகிலிருந்து சட்ட விரோதமாக இரும்பினைக் கொண்டு செல்ல முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சட்ட விரோதமாக கொண்டு செல்வதற்கு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ கிராம் இரும்பு மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் 23 , 39 வயதுடைய அம்பலாந்தோட்டை, அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட இரும்பு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM