பதவியை இராஜினாமா செய்யாதீர்கள் ; மஹிந்த தேசப்பிரியவிடம் பிரதமர் வேண்டுகோள் !

Published By: Vishnu

10 Jul, 2019 | 11:53 AM
image

எதிர்வரும் காலங்களில் பல தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் பதவியை இராஜனாமா செய்ய வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டட வாளாகத்தில் மஹிந்த தேசப்பிரியவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இந்த இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமையானது அரசியலமைப்பு மீறலாகும். தொடர்ந்தும் தேர்தலை காலதாமதப்படுத்துவதானது, அதிகாரபரவலாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதோடு, மாகாண சபை முறைமையினை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான கோரிக்கையையும் மேலெழச்செய்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்தப்படாத பட்சத்தில் அதற்கான பொறுப்பினை ஏற்று ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவவதாக மஹிந்த தேசப் பிரிய அண்மையில் அறிவித்திருந்தார்.

இந் நிலையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த வேண்டுகோளை அவரிடம் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56