பெய்ஜிங், (சின்ஹுவா), ஷங்காயிலுள்ள அமெரிக்க வர்த்தக சபையின் (American Chamber of Commerce - AmCham Shanghai) தலைவரான கெர் கிப்ஸுக்கு சீனாவில் அமெரிக்க வர்த்தகம் தொடர்பில் சகலதும் தெரியும். 'சீனாவில் அமெரிக்க வர்த்தகத்தின் குரல்' என்று பிரபல்யமான 'அம்ஷேம் ஷங்காய் ' பெரும்பாலும் ஷங்காயில் இயங்குகின்ற 1500 அமெரிக்க கம்பனிகளிலிருந்து 3000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. உறவுகளைக் கட்டியெழுப்பும் வாய்ப்புக்களை வழங்குவதன் மூலமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை பலப்படுத்துவதை அது நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
"ஒட்டுமொத்தமாக, அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் சீனாவில் மிகவும் நன்றாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. உறவுமுறை மிகவும் பயனுறுதியுடையதாக இருந்து வருகிறது. இந்த உறவுமுறையிலிருந்து அமெரிக்க பாவனையாளர்கள் மிகப்பெரிய பயன்களை அடைந்துவருகிறார்கள் "என்று சின்ஹுவா செய்தி நிறுவனத்துடனான நேர்காணல் ஒன்றில் கிப்ஸ் கூறினார். சீனாவில் இயங்குகின்ற பல அமெரிக்க கம்பனிகளும் அவர் கூறியதை ஒத்துக்கொள்கிறார்கள். சீனாவின் திறந்த போக்கு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு அபிவிருத்தி ஆகியவை இரு நாடுகளுக்கும் சரியான அணுகுமுறைகள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
விரிவடையும் வர்த்தக பிரசன்னம்
அம்ஷேம் சீனாவினாலும் (AmCham China) அம்ஷேம் ஷங்காயினாலும் கூட்டாக மே மாதம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அமெரிக்காவினதும் சீனாவினதும் வரிவிதிப்புகள் அதிகரித்து வருவதால் தங்களது வர்த்தகச் செயற்பாடுகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வின்போது பதிலளித்தவர்களில் 74.9 சதவீதமானவர்கள் கூறினார்கள். வரிவிதிப்புகளின் தாக்கம் உற்பத்திகளுக்கான வேண்டுகைகளில் காணப்படுகின்ற குறைவு, உயர்ந்த உற்பத்திச் செலவு, உற்பத்திகளுக்கான உயர்ந்த விற்பனை விலை ஆகியவற்றின் ஊடாக உணரப்படுவதாக ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது.
"இந்த வர்த்தகப்போர் சகலரையும் பாதிக்கின்றது என்பதை நிலைவரங்கள் உணர்த்துகின்றன. ஆனால், சீனாவை விட்டு வெளியேறப்போவதாகவோ அல்லது சந்தையைக் கைவிடப்போவதாகவோ அந்த கம்பனிகள் கூறியதாக நான் கேள்விப்படவில்லை. அவ்வாறாக எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை" என்று கிப்ஸ் மேலும் சொன்னார்.
சந்தையைக் கைவிடாமல் இருப்பது மாத்திரமல்ல, சில அமெரிக்க கம்பனிகள் சீனாவில் அவற்றின் வர்த்தகச் செயற்பாடுகளை (சீனச்சந்தையின் நீண்டகால நோக்கிலான வளர்ச்சியை மனதிற்கொண்டு) விரிவாக்கிக்கொண்டிருக்கின்றன.
சீனாவில் 40 வருடங்களாக செயற்பட்டுவரும் அமெரிக்காவின் பாரிய இரசாயன மூலப்பொருட்கள் கம்பனியான டவ் கூட்டிணைப்பு நிறுவனம் (Dow Inc) கடந்தமாதம் கிழக்கு சீன மாகாணமான ஜியாங்சுவின் ஷாங்யியாகாங் நகரில் புதிய விசேட சிலிக்கன் பசை தொழிற்சாலையை ( New Silicone specialty rest line) ஆரம்பித்தது. போக்குவரத்துத்துறை, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் இலத்திரனியல் பாவனைப்பொருட்கள் உற்பத்தித்துறை உட்பட பல பிரிவினரின் உயர்செயற்பாட்டு மூலப்பொருட்கள் தேவையை நிறைவேற்றும் நோக்குடன் ஆரம்பிக்கப்படும் இந்த தொழிற் சாலை ஆசிய --பசுபிக்கில் மிகப்பெரியவற்றில் ஒன்றாகும்.
"சீனா டவ் நிறுவனத்துக்கு ஒரு மூலோபாயச் சந்தையாகவும் உற்பத்தி மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கான மையமாகவும் மாத்திரமல்ல, அந்த நிறுவனத்தின் சர்வதேச விநியோக சங்கிலித்தொடரின் முக்கியமான அங்கமாகவும் இருக்கிறது " என்று ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்ட டவ் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி ஜிம் ஃபிற்றர்லிங் கூறினார்.
அமெரிக்காவின் பிரமாண்டமான கோப்பி நிறுவனமான ஸ்ரார்பக்ஸைப் பொறுத்தவரை, சீனா அதன் மிகப்பெரியதும் விரைவாக வளர்ந்து வருகின்றதுமான சர்வதேச சந்தையாகும். சியட்டிலை தளமாகக்கொண்ட இந்த கோப்பி சங்கிலித்தொடர் நிறுவனம் அதன் கோப்பிக்கடைகளின் எண்ணிக்கையை நிதியாண்டு 2022 அளவில் இரண்டு மடங்காக்குவதன் (6000) மூலமாக சீனாவில் பேரார்வமிக்க விரிவாக்கத் திட்டமொன்றைத் தீட்டியிருக்கிறது.
"சீனாவில் நீண்டகால நோக்கிலான முதலீட்டைச் செய்வதில் நாம் உறுதிகொண்டிருக்கின்றோம் " என்று ஸ்ரார்பக்ஸ் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கெவின் ஜோன்சன் கூறினார்.
முதலீட்டுக்கு தலைசிறந்த இடம்
பல அமெரிக்க கம்பனிகள் சீனாவின் பரந்து அகன்ற உள்நாட்டுச் சந்தையில், ஏராளமான மனிதவளத்தில், இயற்கைக்கு பாதிப்பில்லாத சுற்றுச்சூழல் அமைவுடனான ஆற்றல்மிகு தொழில்துறை மற்றும் உயர்தரமான நுகர்வு ஆகியவற்றில் வாய்ப்புக்களை நாடுகின்றன.
"அமெரிக்க கம்பனிகள் சீனாவை தங்களின் வளர்ச்சிக்கான முதல்நிலையான சந்தைகளில் ஒன்றாக நோக்குகின்றன. உலக கம்பனிகளைப் பொறுத்தவரை சீனச்சந்தை இன்றியமையாததாகும் " என்று கெர் கிப்ஸ் கூறினார்.
ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் சீனாவின் சந்தையில் பிரவேசம் செய்த முதலாவது பல்தேசியக் கம்பனிகளில் ஒன்றான அமெரிக்க கைத்தொழில் குழுமமான ஜெனரல் எலெக்ரிக்ஸ் கம்பனி சீனாவின் பொருளாதார மறுசீரமைப்பும் உயர்தரமான அபிவிருத்தியும் மிகப்பெருமளவில் வாய்ப்புக்களை உருவாக்குவதை காண்கிறது.
"நகரமயமாக்கல், எளிதில் பெறக்கூடியதாக இருக்கும் சுகாதாரப்பராமரிப்பு, தூய்மையான சக்தி மற்றும் இனரர்நெற் பிளஸ் உட்பட சீனாவின் தேசிய பொருளாதார வளர்ச்சி மூலோபாயங்கள் ஜெனரல் எலெக்ரிக்ஸுக்கு பெருமளவு வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன " என்று அந்த குழுமத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான றச்சேல் டுவான் சின்ஹுவாவுக்கு கூறினார். பல வருடங்களாக ஜெனரல் எலெக்ரிக்ஸ் சீனாவில் அதன் தலைமையகமான ஷங்காயில் 120 கோடி டொலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கும் டுவான், சீனச்சந்தையின் உள்ளுரம் மற்றும் நீடிப்பாற்றல், உயர்தர கைத்தொழில்துறை, மூலதனம், ஆற்றல், நிலம் ஆகியவை தொடர்பிலான முன்னுரிமைக் கொள்கைகளினால் தாங்கள் பெரும் பயனடைந்ததாக கூறுகிறார்.
"சீர்திருத்தம், திறந்த போக்கு ஆகியவை மீது சீனா கொண்டிருக்கின்ற மனவுறுதி சீனாவில் எமது வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு நம்பிக்கையை ஊட்டியது " என்று சீனாவில் வளர்ந்த முதலாவது ஜெனரல் எலெக்ரிக்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டுவான் கூறினார்.
டவ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜிம் ஃ பிற்றர்லிங்கைப்பொறுத்தவரை, சீனாவின் நிலைபேறான நகரமயமாக்கல் தங்களது கம்பனிக்கு மிகச்சிறந்த வாய்ப்பு என்று கூறுகிறார்.
"அடுத்த இரு தசாப்தங்களில் நகரங்களுக்கு நகருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற 30 கோடி மக்களுக்கு ஆதரவளிக்க சீனா செயற்திறனுடைய சக்தி, வசதியான குடியிருப்பு மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், தூய நீர், தூய காற்று ஆகியவற்றைக் கொடுக்கவேண்டிய தேவை இருக்கிறது. இத்தகைய பல சவால்களை சமாளிப்பதற்கு தேவையான உற்பத்திப் பொருட்களை டவ் நிறுவனத்தால் வழங்கக்கூடியதாயிருக்கும் " என்றும் அவர் குறிப்பிட்டார்.
புத்தாக்கத்தின் தேசம்
பல வருடங்களாக சீனாவில் வாழ்ந்துவரும் நீடித்த அனுபவமுடைய ஒரு தொழிலதிபர் எனறவகையில் கெர் கிப்ஸ் சீனாவை வர்த்தகம் செய்வதற்கு சிறந்த ஒரு நாடு என்றும் புத்தாக்கங்களைச் செய்வதற்கு தலைசிறந்த இடம் என்றும் கூறுகிறார். " புத்தாக்கமில்லாத நாடு என்று சீனாவை எவராவது கூறுகிறார் என்றால் அவர் அங்கு உண்மை நிலைவரத்தை கவனிக்கத் தவறியிருக்கிறார் என்றுதான் அர்த்தம். ஏனென்றால், சீனாவில் பெருமளவு புத்தாக்க முயற்சிகள் குறிப்பாக, தொழில்நுட்பத்துறையிலும் கைத்தொலைபேசி தயாரிப்பிலும் முன்னெடுக்கப்படுகின்றன " என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவில் சீனாவுக்காக
அதேவேளை, அமெரிக்க நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளை சீனச்சந்தைக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொண்டிருக்கின்றன. அதற்காக " சீனாவில் சீனாவுக்காக " என்ற மூலோபாயத்தை அவை வகுக்கின்றன. சீனாவில் சீனாவுக்காக என்பது தயாரிப்பை உள்நாட்டுப் பண்புமயப்படுத்தி பிரதானமாக சீனச்சந்தைக்கு சேவை செய்வதற்கு சீனாவுக்குள்ளேயே விநியோகத்தர்களை கண்டுபிடிக்கும் ஒரு மூலோபாயமாகும். அத்தகைய மூலோபாயம் பல கம்பனிகளுக்கு நியாயமானதும் செயல்முறைக்கு உகந்ததுமான ஒரு தெரிவாக அமைகிறது. அதாவது உள்நாட்டுச் சந்தை வாய்ப்புக்களை நாடுவதிலான ஆற்றலை பேணிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை தீர்வைகளின் தாக்கங்களில் இருந்து கம்பனிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.
ஷங்காயில் அமைந்திருக்கும் ஸ்ரார்பக்ஸ் றிசேர்வ் றோஸ்ரறியே அமெரிக்க காப்பி கம்பனியான ஸ்ரார்பக்ஸ் சீனாவில் முதலில் திறந்த நிலையமாகும். உலகளாவிய ரீதியில் சங்கிலித்தொடராக அமைந்திருக்கும் ஸ்ரார் பக்ஸ் காப்பி கடைகளின் ஒரு அங்கமாக விளங்கும் ஷங்காய் நிலையம் இணையம் மூலமான வாடிக்கையாளர்களுக்கும் சேவையை வழங்குகிறது. வாடிக்கையாளர் கையாளுவதற்கு இலகுவாக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் வெப் அப்ஸ்களை பயன்படுத்தி கைத்தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஷங்காய் ஸ்ரார்பக்ஸ் றோஸ்ரறியின் சேவைகளைப்பெற்று மகிழுமாறு வாடிக்கையாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். விசேடமாக அமைக்கப்பட்ட அப்ஸ்கள் மூலம் ஸ்ரார்பக்ஸ் நிறுவனத்தின் கோப்பிக்கொட்டையிலிருந்து கோப்பி பானம் வரையான செயன்முறைகள் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.
"53,000க்கும் அதிகமான எமது பங்காளர்களினால் வழங்கப்படுகின்ற மேம்பா டான வாடிக்கையாளர் அனுபவத்தின் கார ணமாக உலகின் வேறு எந்தப் பகுதியை யும் விட சீனாவில் துரிதமாக ஸ்ரார் பக்ஸ் வளர்ச்சிகண்டு வருவதுடன் புத்தாக்க முயற் சிகளையும் விரைவாக முன்னெடுக்கிறது" என்று ஸ்ரார்பக்ஸ் காப்பி கம்பனியின் தலை வரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கெவின் ஜோன்சன் கூறினார்.
சீனாவின் பொருளாதார வாய்ப்புக்கள் குறித்து பேசிய ஷங்காய் அம்சேம் தலை வரான கிப்ஸ் சீனா அதன் சந்தையை திறந்ததாக தொடர்ந்து வைத்திருக்க வேண் டும் என்பதுடன் உலக கம்பனிகள் அந்த சந்தையில் வாய்ப்புகளைப் பெறுவதை சுலபமானதாக்கவும் வேண்டும். சீனா எழுச்சி பெறும்; தொடர்ந்து எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையுடன்தான் அமெரிக்க கம்பனிகள் முதலீடுகளை செய்துகொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
"வர்த்தகத்துறைப் பின்புலத்தில் நோக்கு கையில், சீனா எழுச்சி பெறுவதைக் காணும் போது அது குறித்து நாம் அஞ்சவில்லை; உண்மையில், சீனா தொடர்ந்து எழுச்சி பெறும் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்வு கூறுகிறோம். அந்த எழுச்சியை மனதிற் கொண்டு தான் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்" என்றும் அவர் கூறி னார்.
வீ.தனபாலசிங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM