(எம்.மனோசித்ரா)
நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது காணிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்காக காணி கொள்வனவு மற்றும் காணி தொடர்பான ஒழுக்க விதிகள் சட்டத்தின் மூலம் நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் வசதிக்கேற்பவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
பிரதமர் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ள காணி தொடர்பான இந்த சட்டங்கள் மூலம் பரம்பரையாக காணிகளுக்கு உரிமம் கொள்ள முடியாத நிலைமையை தோற்றுவிக்கும். இதனால் அப்பாவி விவசாய மக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கடந்த 2003ஆம் ஆண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போதும் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. இதே சட்டத்தை 2015 ஆம் ஆண்டு மீண்டும் கொண்டு வர முயற்சித்த போது எமது எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
எனினும் மீண்டும் இவ்வருடம் மார்ச் 23ஆம் திகதி இது தொடர்பான யோசனையை பிரதமர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இவ்விடயத்தில் உடன்பாடு கிடையாது. இதை அவர் அமைச்சரவைக் கூட்டத்திலும் தெரிவித்துள்ளார். தற்போதும் நீதிமன்றத்தில் இந்த சட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணி தொடர்பான இந்த சட்டங்கள் மூலம் திருகோணமலை தொடக்கம் கொழும்பு வரையான பொருளாதார வலய திட்டத்திற்கு மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவுக்கு இடங்களை தாரை வார்ப்பதே பிரதமரின் நோக்கமாகும். இதற்காக அமெரிக்காவிடமிருந்து 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்றுக் கொள்ளப்படவிருப்பதாக தெரியவருகிறது. ஆனால் இந்த நிதி எதற்காக, ஏன் பெறப்படுகிறது என்ற ஒரு திட்டமிடலும் இல்லை.
இவ்வாறு உள்நாட்டு இடங்களை அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். அவ்வாறில்லையென்றால் மக்கள் இதற்கு எதிராக வீதிக்கு இறங்க வேண்டிய நிலைமையே ஏற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM