கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்ட சிறப்பு விமானம் இன்று நாட்டில் இருந்து இந்தியாவிற்கு பயணமாகவுள்ளது.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய "ZS-ASN" ரகத்திலான "The Basler BT-67" என்ற விமானமே தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் ஒரே நேரத்தில் 1000 மீற்றர் உயரத்திலிருந்து நிலத்தைத் துல்லியமாகவும் மேலோட்டமாகவும் படம் பிடிக்கக்கூடியது.
மூன்று நாட்கள் திட்டத்துக்காக குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தோனே சியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள குறித்த விமானம், இன்று இந்தியா நோக் கிப் புறப்படவுள்ளது.
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்திடம் இது தொடர்பில் வினவியபோது, விமானத்தின் வருகை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என்றும் ஆனால், நாட்டில் எவ்விதக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என் றும் பணியகம் சுட்டிக் காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM