(இங்கிலாந்தின் லீட்ஸ் அரங்கலிருந்து நெவில் அன்தனி)
சாதனைகள் பற்றி நான் ஒருபோதும் எண்ணிப்பார்த்ததில்லை. நான் கிரிக்கெட் விளையாடவே இங்கு வந்துள்ளேன். இயலுமான அளவு ஓட்டங்களைக் குவிப்பதே எனது நோக்கம். கிண்ணத்தை சுவீகரிப்பதுதான் பிரதானம். நேர்மையாக சொல்வதென்றால் சாதனைகள் பற்றி நான் எண்ணவில்லை என ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக லீட்ஸ், ஹெடிங்லே அரங்கில் சதம் குவித்ததன் மூலம் உலகக் கிண்ண அத்தியாயமொன்றில் 5 சதங்கள் குவித்த சாதனையாளர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ரோஹித் ஷர்மா மேற்கண்டவாறு குறப்பிட்டார்.
''எத்தனை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடினோம். எத்தனை ஓட்டங்களைக் குவித்தோம், எத்தனை சதங்கள் குவித்தோம் என்றெல்லாம் நான் எண்ணமாட்டேன். மேலும் கடந்த காலத்தைவிட நிகழ்கால்தைப் பற்றி மாத்திரம் சிந்தித்து விளையாடிவருகின்றேன். மைல்கற்களைப் பற்றியும் நான் நினைத்துப்பார்ப்பதில்லை. அவற்றுக்கும் அப்பால் திறமையாக விளையாடவேண்டும் என்ற உற்சாகத்தை இங்கு வந்துள்ள எனது குடும்பத்தினர் வழக்கிவருகின்றனர்'' என அவர் மேலும் கூறினார்.
2011இல் உலக சம்பியனான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து ஏமாற்றம் அடைகின்றீர்களா எனக் கேட்கப்பட்டபோது,
''எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. அதனைக் கடந்துவந்துவிட்டேன். அப்போது வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கத்தான் செய்கின்றது. ஆனால் இன்று சிறந்த நிலையை அடைந்துள்ளது அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். கடந்த காலங்களில் என்ன நேர்ந்து என்பது பற்றி நான் சிந்திப்பதில்லை. நிகழ்காலத்தைப் பற்றி கவனம் செலுத்துவதே முக்கியம் என்பதை நான் கூறிவந்துள்ளேன். நாங்கள் ஒரு குறிக்கோளை நோக்கி இங்கு வந்துள்ளோம். அந்த குறிக்கோள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை'' என பதிலளித்தார்.
''ஐ.பி.எல். போட்டிகளில் நான் ஒட்டங்கள் பெறாதபோது எனது பெரிய சகோதரர் யுவ்ராஜ் சிங் எனக்கு ஆறுதல் கூறனார். உரிய நேரத்தில் நீங்கள் சாதிப்பீர்கள் என்றார். அவர் உலகக் கிண்ணத்தை நினைத்துத்தான் அப்படி கூறினார் போலும். அவரும் அப்படித்தான். 2011 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் அவர் போதிய ஓடடங்களைப் பெறவில்லை. திடமான மனோ நிலையுடன் விளையாடினால் சாதிக்க முடியும் என்றார். அதுதான் அவரை 2011இல் பிரகாசிக்கவைத்தது'' என ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM