தயாசிறி தெரிவுக்குழுவில் முன்னிலையாகாவிட்டால் சட்ட நடவடிக்கை -  சரத்பொன்சேகா 

Published By: R. Kalaichelvan

05 Jul, 2019 | 07:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

குண்டுதாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு  ஜனாதிபதி, பிரதமர்,  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷ மற்றும்  முன்னாள் சட்டவொழுங்கு அமைச்சர் ஆகியோர் நிச்சயம் அழைக்கப்படுவார்கள். சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர்  தயாசிறி  ஜயசேகர  பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு  வராவிடின் சட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என   பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார். 

 முஸ்லிம் அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் மீது  போலியான குற்றச்சாட்டுக்களை   சாட்டுவதால் ஒருபோதும் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது.  அரசியல் இலாபத்திற்காகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது எனவும்  அவர் மேலும் தெரிவித்தார். 

கம்பஹா நகரில்  இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு ஜனாதிபதி  பாதுகாப்பு பிரதானி என்ற வகையில் நிச்சயம் சாட்சியமளிக்க வேண்டும். 

பிரதமர் , முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோத்தபய ராஜபக்ஷ,  முன்னாள் சட்டவொழுங்கு அமைச்சர் ஆகியோரும் அழைக்கப்படுவார்கள். இதன் பின்னர்  பாராளுமன்ற தெரிவு குழு  பாராளுமன்றத்திற்கு உரிய  அறிக்கையினை சமர்ப்பிக்கும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09