(இராஜதுரை ஹஷான்)
குண்டுதாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சட்டவொழுங்கு அமைச்சர் ஆகியோர் நிச்சயம் அழைக்கப்படுவார்கள். சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு வராவிடின் சட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சாட்டுவதால் ஒருபோதும் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது. அரசியல் இலாபத்திற்காகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கம்பஹா நகரில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி என்ற வகையில் நிச்சயம் சாட்சியமளிக்க வேண்டும்.
பிரதமர் , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ, முன்னாள் சட்டவொழுங்கு அமைச்சர் ஆகியோரும் அழைக்கப்படுவார்கள். இதன் பின்னர் பாராளுமன்ற தெரிவு குழு பாராளுமன்றத்திற்கு உரிய அறிக்கையினை சமர்ப்பிக்கும் என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM