இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பகுதியில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவில் எரிமலையில் வெடித்தமையால் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரபல சுற்றுலா தலமான ஸ்ட்ரோம்போலியில், கடலை ஒட்டியவாறு எரிமலை ஒன்று இருக்கிறது. இந்த எரிமலையில் அவ்வப்போது வெடிப்பு ஏற்பட்டு, சிறிதளவு எரிகுழம்புகளை கக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து ஸ்ட்ரோம்போலி தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலையடிவாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும், உருகிய நிலையிலிருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த எரிமலை திடீரென வெடித்து, எரிகுழம்பு வெளியேறியது. இதனால் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 30–க்கும் மேற்பட்ட சுற்றலா பயணிகள் பயத்தில் கடலில் குதித்தனர். எரிமலை வெடித்தபோது, மலையில் இருந்து விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
எரிமலை தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டு சாம்பல் புகையை கக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM