காட்டு யானை தாக்கியதில்  குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலியான சோகம்

Published By: Digital Desk 4

03 Jul, 2019 | 02:57 PM
image

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள குசலானமலையடிவாரத்தில் வைத்து குடும்பஸ்தரை காட்டு யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று புதன்கிழமை  அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாலர்சேனை, வேப்பவெட்டுவான் பகுதியைச் சேர்ந்த  இரண்டு பிள்ளைகளின் தந்தையான சைமன் சில்வா தயானந்த (வயது 55) என்ற தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினமான இன்று அவர் வழமைபோன்று மாடுகளைப் பராமரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த போது காட்டுப்பகுதிக்குலிருந்து திடீரென  வந்த காட்டு யானை அவரைத் தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்நிலையில் சடலம் உடற்கூறாயவுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00