போதைப்பொருளை தடைசெய்யக் கோரி செட்டிகுளம் மாணவர்கள் ஊர்வலம் : மகஜரும் கையளிப்பு

Published By: Digital Desk 4

03 Jul, 2019 | 01:29 PM
image

போதைப் பொருள் பாவனையை தடை செய்யக் கோரி வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் ஊர்வலம் ஓன்றினை இன்று மேற்கொண்டதுடன், பிரதேச செயலாளரிடம் மகஜர் ஓன்றினையும் கையளித்தனர்.

செட்டிகுளம் மகாவித்தியாலத்தின் முன்றலில் ஆரம்பமான மாணவர்களின் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான ஊர்வலம் செட்டிகுளம் மதவாச்சி வீதி வழியாக சென்று வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தை அடைந்தது.

கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மோதைப்பொருள் பாவனைக்கு எதிரான சுலோகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

அத்துடன், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரனிடம் செட்டிகுளம் பகுதியில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு மாணவர்கள் மகஜர் ஓன்றினையும் இதன்போது கையளித்தனர்.

இவ் ஊர்வலத்தில் செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55