இந்தியாவில் மகராஷ்ட்ரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் கொட்டி தீர்த்து வருவதால் மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளித்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் வீடுகளும், வீதிகளும் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறி உள்ளன. வீதி, ரயில், விமான போக்குவரத்தும் முடங்கி காணப்படுகின்றது.
பெய்துவரும் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இதில் மும்மையில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 78 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்கள்.
இந்நிலையில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை உடைந்துள்ளது. இதனால், அருகில் உள்ள ஏழு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 12 வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளதோடு, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வெள்ளநீரில் 20 பேர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
1974-ம் ஆண்டு மும்பையில் இதேபோன்ற பிரளயம் ஏற்பட்டது. அப்போது ஒரே நாளில் 375.2 மி.மீ. மழை பெய்தது. 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே மழை அளவு பதிவாகி உள்ளது.
அதாவது, நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 375.2 மி.மீ. பதிவாகி வரலாறு காணாத மழை பெய்து உள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM