அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு ஆணைக்குழுவினால் 5 இலட்சம் ரூபா வரையில் தண்டப்பணம் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தேசிய போக்குவரத்து சபைத் தலைவர் ஜனக மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணங்களில் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி 200 பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. இது மேலும் அதிகரிக்கப்படும். இந்த அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுவதனால் அனுமதிப்பத்திரத்துடன் சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கிப்படுகின்றது. இவர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தியே சேவையில் ஈடுபடுகின்றன.
இருப்பினும் வீதியில் அனுமதிப்பத்திரம் இன்றி பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவோர் குறிப்பிட்ட நேரங்களின்றி சேவையில் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ் நடத்துநர்கள் உள்ளிட்டோர் மத்தியில் மோதல்கள் இடம்பெறுகின்றன.
விசேடமாக இவ்வாறு பெரும் எண்ணிக்கையான பஸ்கள் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கிடையே சேவைகளில் ஈடுபடுகின்றன. குறிப்பாக இந்த பஸ்கள் குறிப்பிட்ட பஸ் நிலையங்களுக்குள் உள்வாங்கப்படுவதில்லை.
குறிப்பாக வெள்ளவத்தை, மருதானை, தெஹிவளை, கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களிலிருந்து பஸ் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். இது பாரிய அநீதியாகும்.
இதன் காரணமாக 250,000 ரூபாவாக உள்ள தண்டப்பணத்தை 500,000 ரூபாவாக அதிகரிப்பது காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும் என தேசிய போக்குவரத்து சபைத் தலைவர் ஜனக மல்லிமாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM