(எம்.எப்.எம்.பஸீர்)
சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு இவர்கள் இருவரிடும் குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக பெற இன்று காலை 10 மணிக்குசி.ஐ.டி தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் இவர்கள் சமூகமளிக்காமல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஹேமசிறி பெர்னாண்டோ இருதய கோளாறு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், காய்ச்சலுடன் கூடிய திடீர் சுகயீனம் காரணமாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாரஹேன்பிட்டியில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்தந்த வைத்தியசாலைகளில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே, இன்று பிற்பகல் வைத்தியசாலைகளுக்கு சென்ற சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் மேற்பார்வையின் கீழான இரு சிறப்புக் குழுக்கள் அவர்களிடம் வாக்கு மூலம் பதிவுச் செய்துகொண்ட பின்னர், அவர்களைக் கைது செய்தனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும், சி.ஐ.டி.யினரின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலைகளிலேயே தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த கைதுகள் குறித்து சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு மாலை அறிக்கை சமர்ப்பித்த நிலையில், மாலை வேளையில் கொழும்பு பிரதான நீதிவான் லங்க ஜயரத்ன கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும், நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலைக்கும் சென்று சந்தேக நபர்களைப் பார்வையிட்டதுடன் நாளை வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM