மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் போதைப் பொருள் குற்றவாளிகளை பாதுகாக்க  முயற்சிக்கின்றனர் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 

Published By: R. Kalaichelvan

02 Jul, 2019 | 02:48 PM
image

(எம்.மனோசித்ரா)

மரண தண்டனை என்பது ஒரு புதிய விடயம் இல்லை.அது இலங்கையின் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயமாகும். இப்போது மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 1989 ஆம் ஆண்டு நாட்டில் மரண தண்டனை வேண்டாம் என்ற சர்வதேச ஒப்பந்தத்தில் ஏன் கையெழுத்திடவில்லை என்று கூற வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்ததாவது,

ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ என்று முன்னைய  எந்த ஜனாதிபதியும் மரண தண்டனையைப் பயன்படுத்தவில்லை. 

அந்த காலங்களில் போதைப் பொருள் பாரியதொரு பிரச்சினையாகக் காணப்படவுமில்லை. ஆனால் இன்று போதைப் பொருள் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனை நிச்சமாக வழங்கப்பட வேண்டும். 

போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியமைக்கு எதிர்ப்பை தெரிவிப்பவர்கள், போதைப் பொருளுக்கு அடிமையாகி இறந்த நூற்றுக்கணக்கானவர்கள் குறித்து சிந்திக்கவில்லை. இவ்வாறு நூற்றுக்கணக்கான உயிர்கள் அநியாயமாக பலியாவதற்கு பதிலாக அந்த மரணங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் கொல்லப்படுவதில் தவறில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32