மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரண மாக மனித உடலில் ஏற்படும் கடுமையான நோய்களில் ஒன்றாக ஹீமோபீலியா உருவெ டுத்துள்ளது. அத்துடன் இந் நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்நோய் தாக்கியவர்கள் பெரும்பாலும் மரணமடைவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாகத்தான் ஹீமோபீலியா நோய் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் ஆண் களையே தாக்குகிறது. ஏனெனில் ஆண்களின் உடலில் எக்ஸ் மற்றும் வை குரோமோசோம்களும், பெண்களுக்கு எக்ஸ் மற்றும் எக்ஸ் குரோமோசோம்களும் உள்ளன. இதில் ஆண்களிடத்தில் உள்ள எக்ஸ் குரோமோசோம்களில் ஒன்றில் சிறிய அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர் களுக்கு இந்நோய் தாக்கக்கூடும்.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் கசியத் தொடங்கினால், அவை உறையாமல் தொடர்ச்சியாக கசிந்து கொண்டேயிருக்கும். குறிப்பாக மூட்டு பகுதி களில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசியத் தொடங்கினால், உறையாமல் தொடர்ந்து வழிந்து கொண்டேயிருக்கும். அத்துடன் காலில் பெரிய வீக்கத்தையும் உண்டாக்கிவிடும். இது தான் இந்நோயின் அறிகுறி. அதே போல் உடலின் ஏனைய பகுதிகளில் இரத்தக்கசிவு இருந்தாலும் சிகிச்சையளித்து காப்பாற்றி விட இயலும். ஆனால் மூளை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் உள்பக்கத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டால் அவர்களுக்கு மரணம் ஏறக்குறைய உறுதி யாகிவிடும். இந்நோய் ஏற்படுவதற்கு பெற்றோர்களுக்கு முக்கிய பங்குண்டு. அதிலும் ஆண்களுக்கு மட்டுமே இதில் பெரும் பங்கிருக்கிறது. ஒரு சிலருக்கு இந்த பாதிப்பு இருந்தாலும், குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை ஆண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட பெண்களும் காரண மாகிவிடுகிறார்கள்.
இவர்களுக்கான சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஊசி மருந்து விலை கூடியதாக இருக்கிறது. ஆனால் தற்போது பிளாஸ்மாவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கிரியோபிரசிபிடேட்டை ஊசி மூலம் செலுத்தி சிகிச்சை அளிக்கிறார்கள்.
அத்துடன் இந்த நோயை நிரந்தரமாக குணப்படுத்த இயலாது. இரத்தக்கசிவு ஏற்படும் போதெல்லாம் தேவையான அளவிற்கு இவ்வகையான ஊசிகளின் மூலம் தான் நிவாரணம் பெற்று உயிர் வாழ இயலும். இத்தகைய சிகிச்சைகளைப் பெறாமல் விடுவது பெரிய ஆபத்தை தோற்றுவிக்கும்.
டாக்டர். அருணா
தொகுப்பு: அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM