நான் வாழ் நாளில் சஹ்ரானை பார்த்ததில்லை - தெரிவிக்குழு சாட்சியத்தில் ரிஷாத்

Published By: Vishnu

28 Jun, 2019 | 07:27 PM
image

(ஆர்.யசி)

கடந்த ஆண்டு அக்டோபர் அரசியல் புரட்சியில் ராஜபக்ஷ அணியில் இணைந்துகொள்ள எனக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனை நான் மறுத்தேன். அதன் காரணமாகவே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு என்னை சஹரானுடன் தொடர்புபடுத்தி பேசுகின்றனர், நானோ எனது குடும்பத்தினரோ பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபடவில்லை, நான் சஹரானை பார்த்தது கூட இல்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன்னிலையில் இவற்றைக் குறிப்பிட்டார். 

தெரிவுக்குழு அமைக்க வேண்டும் என நன் பாராளுமன்றத்தில் தெரிவித்தேன். நான் மட்டும் அல்ல ஏனைய உறுப்பினர்கள் பலர் தெரிவுக்குழு வேண்டும் என்று கூறினார்கள். பயங்கரவாத செயற்பாடுகளுடன் என்னை தொடர்புபடுத்தி பாராதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் என்னை தொடர்புபடுத்தினர். 

ஆகவே என்மீதான  குற்றங்களை நான் நிராகரித்து அதனை நிருபிக்க வேண்டும். ஆகவே நானே தெரிவுக்குழு முன்னிலையில் வரவும் இணக்கம் தெரிவித்தேன். என்மீது குற்றம் சுமத்தி பொலிசில் சிலர் முறைப்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட சஹரானை நான் வாழ்கையில் எப்போதும் பார்த்ததில்லை. இந்த தாக்குதல் இடம்பெற்று   ஊடகங்களில்  வெளியிடப்பட்ட புகைப்படத்தின் மூலமாகவே சஹரானை  முதலில் பார்த்தேன். இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும்  இல்லை.

இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற  நிலைப்பாட்டில் நானும் உள்ளேன்.  இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் நானும் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும்  கர்தினாலை  சந்தித்து இது குறித்த வருத்தத்தை  தெரிவித்தோம். இந்த பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட அனைவரையும்  தண்டிக்க எம்மாலான சகல உதவிகளையும் வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தேன், அன்றில் இருந்து  இப்போது வரியில் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்க வருகின்றோம். அதுமட்டும் அல்ல எமது மதத் தலைவருடன் இணைந்து நாம் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டில் கருத்தொன்றை முன்வைத்தோம். இந்த பயங்கரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்ட எவரதும் உடல்களை எமது மயானனளில் அடக்கம் செய்ய அனுமத்திக்க மாட்டோம் என்றும் நாம் கூறினோம். இது எதிர்கால இளைஞர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கூறினோம். இந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் என்ற பெயரை வைத்துக்கொண்டு பயங்கரவவாதத்தில் ஈடுபடலாம். ஆனால் இவர்கள் எவரும் முஸ்லிம்கள் அல்ல. தற்கொலை தாக்குதல் செய்யவோ ஏனைய இனத்தவரை கொலைசெய்யவோ இஸ்லாம் கூறவில்லை என்றார். 

(சாட்சியத்தின் முழு விபரம் நாளைய வீரகேசரியில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15