பிணைமுறிகள் மோடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் பேப்பர்ச்சுல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலோஷியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால் இன்றைய தினம் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவின் கையொப்பத்துடன் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா சாந்தனி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன், பத்தினிகே சமரசிறி, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம், அர்ஜூன் ஜோசப் அலோசியஸ், கசுன் பாலிசேன, ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், டி.மித்ரா குணவர்தன, சி.ரஞ்சன் ஹூலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன் மற்றும் ஆஜான் புஞ்சிஹேவா ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
இதனை அடுத்து பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள 10 பேரையும் எதிர்வரும் ஜூலை 19 அம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM