அமெரிக்காவில் கூகுள் வரைப்படம் காட்டிய குறுக்குப் பாதையில் சென்ற 100 கார்கள், ஒரே இடத்தில் தவறான வழியில் சிக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்பெல்லாம் புதிதாக ஓரிடத்திற்கு சென்றால், கையில் துண்டுச் சீட்டுகள் வைத்துக் கொண்டு, எந்த இடத்திற்கு சென்றோமோ அங்கு இருப்பவரிடமோ, அல்லது அங்கு கடை வைத்திருப்பவரிடமோ சென்று, இந்த குறிப்பிட்ட இடம் எங்கு உள்ளது? என கேட்போம்.
அந்த காலம் மாறிப்போய் இப்போது நாமே இடத்தை எளிதாக கண்டுப்பிடிக்கிறோம். இதற்கு காரணம் நம் கையில் உள்ள தொலைபேசி மற்றும் கூகுள் வரைப்படம் இந்த வசதி அனைத்து ஆண்டிரொய்ட் தொலைபேசிகளிலும் உள்ளது.
நாம் எங்கிருந்தாலும், எங்கு செல்ல வேண்டும் என்றாலும், வரைப்படம் காட்டும் பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டோம். அப்படி சென்றபோது அமெரிக்காவில் ஒரு எதிர்ப்பாராத சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் கொலார்டோ மாநிலத்தில் உள்ள டென்வேர் சர்வதேச விமான நிலையம் செல்ல, வெவ்வேறு இடத்தில் இருந்துக் கொண்டு சிலர் கூகுள் வரைப்பட உதவியை நாடியுள்ளனர்.
அவர்களுக்கு கூகுள், குறைந்த நேரத்தில் விரைவில் விமான நிலையம் அடைய குறுக்குப் பாதையை காட்டியுள்ளது. குறைந்த நேரத்தில் செல்லும் என்பதால் 100 பேர் இதனை பின்தொடர்ந்து காரில் சென்றுள்ளனர்.
இந்த பாதை மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. இருப்பினும் சென்றுள்ளனர். ஒரு இடத்தில் 100 கார்களும் போக வழியின்றி சிக்கியுள்ளன. பின்னர்தான் தெரிந்தது தவறான பாதை என்று.
இது குறித்து அங்கு வந்திருந்த மான்சிஸ் தெரிவிக்கையில், ‘கணவரை அழைக்க விமான நிலையம் செல்வதற்காக கூகுள் வரைப்படத்தில் குறைந்த நேரத்தில் செல்லக்கூடிய பாதையை தேடினேன்.
இந்த பாதையை தான் காட்டியது. இங்கு வந்து பார்த்தால் என்னைப்போல் 100 கார்கள் நிற்கின்றன. கடைசியாகதான் தெரிந்தது. தவறான பாதை என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவனம் தெரிவிக்கையில்,
‘கூகுள் வரைப்படம் ஒரு வழியை தெரிவு செய்து காட்டும்போது, வீதியின் அளவு மற்றும் அந்த பாதையில் பயணிக்கும் நேரம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்துதான் காட்டுவோம். சில நேரங்களில் இப்படி நடக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM