பேசாலை காட்டாஸ்பத்திரி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைப்படகு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவினை நேற்று புதன் கிழமை(26) கடற்படையினர் மீட்டுள்ளனர்.
நேற்று காலை காட்டாஸ்பத்திரி கடற்கரையில் கடற்படையினர் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த படகை சோதனையிட்டுள்ளனர்.
இன் போது குறித்த படகில் காணப்பட்ட பொதிகளை மீட்டு சோதனை செய்த போது குறித்த பொதியினுள் கேரள கஞ்சா காணப்பட்டுள்ளது.
9 பொதிகளில் 18 கிலோ 900 கிராம் நிறை கொண்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சுமார் 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பேசாலை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM