கன்­னி­யாவில் பௌத்த போதி அமைக்க நான்கு ஏக்கர் நிலம் கோரி­யுள்ள விகா­ரா­தி­பதியால் சலசலப்பு..!

Published By: J.G.Stephan

27 Jun, 2019 | 12:18 PM
image

கன்­னி­யாவில் பௌத்த போதி அமைத்து மீண்டும் அந்தப் பகு­தியை கைய­கப்­ப­டுத்த கன்­னியா விகா­ரா­தி­பதி மீண்டும் முயற்சி எடுத்­துள்­ள­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது.  இதற்­கு­ரிய ஏற்­பா­டாக காணியை அள­வீடு செய்யும் நட­வ­டிக்கை இன்று கன்­னி­யாவில் இடம்­பெ­ற­வுள்­ள­தா­கவும் இது தொடர்­பாக கன்­னியா தென்­க­யிலை ஆதீனம், தமிழர் சமூகம், ராவண சேனை, கன்­னியா ஆலய நிர்­வாகம் மற்றும் கிராம அபி­வி­ருத்தி சங்­கங்கள்  தமது கடு­மை­யான எதிர்ப்பை தெரி­வித்­துள்­ளன.

வர­லாற்றுப் புகழ்­கொண்ட கன்­னியா வெந்­நீ­ரூற்று பிள்­ளையார் ஆல­யத்தை அண்­டிய பகு­தியில் புத்­த­போதி ஒன்றை அமைப்­ப­தற்கு நான்கு ஏக்கர் காணியை  ஒதுக்­கித்­த­ரும்­படி  சுடு­நீர்க்­ கி­ணறு ரஜ­மகா விகாரை விஹா­ரா­தி­பதி, திரு­கோ­ண­மலை பிர­தேச செய­லா­ளரிடம் கோரி­ய­தற்கு அமைய பிர­தேச செய­லாளர் ஒரு ஏக்கர் காணியை  மேற்­படி விஹா­ரா­தி­ப­திக்கு வழங்க ஆவன செய்­யும்­படி கிழக்கு மாகாண காணித் திணைக் ­க­ளத்­துக்கு  உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கவும் அந்தப் பணிப்­புக்கு அமைய வெந்­நீரூற்றுப் பகு­தியை அண்­டிய பகு­தியில் காணி அள­வீடு இன்று நடை­பெ­ற­வுள்­ள­தா­கவும்   தெரி­விக் கப்­ப­டு­கி­றது.  

மேலும் தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது, 

கன்­னியா வெந்­நீ­ரூற்றுப் பகு­திக்கு மேலு ள்ள பகு­தியில் 2010ஆம் ஆண்­டுக்குப் பின் உரு­வாக்­கப்­பட்ட விகாரை தொடர்­பாக கன்­னியா ஆலய பரி­பாலன சபையும் இந்து மக்­களும் தமது அதி­ருப்­தியைத் தெரி­வித்­து­வரும் நிலையில் கடந்த மே மாதம் 24ஆம் திக­தி­ய­ளவில் பழைமை வாய்ந்த கன்­னியா பிள்­ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மீண்டும் ஒரு புத்த போதியை அமைக்க முயற்­சிகள் எடுக்­கப்­பட்ட நிலையில் மேற்­படி போதி அமைப்­புக்கு சமூக அமைப்­புகள் காட்­டிய எதிர்ப்பு கார­ண­மாக மாவட்ட அர­சாங்க அதிபர் தலை­யிட்டு தற்­கா­லி­க­மாக  போதி அமைக்கும் முயற்­சிக்கு தடை ­வி­தித்­துள்ளார். 

இந்த விவ­காரம் தொடர்பில் அண்­மையில் தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கும் சமூக அமைப்­பு­க­ளுக்­கு­மி­டை­யி­லான கலந்­து­ரை­யாடல் நடத்­தப்­பட்­டது. 

இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது குறித்த விஹாரா­தி­ப­தியும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார். அன்­றைய தினம் குறித்த கலந்­து­ரை­யா­டலில் அமைச்சர் மனோ கணே­சனும் கலந்து கொண்டு ஒரு சில உடன்­பா­டுகள் காணப்­பட்­டன.

 இது இவ்­வா­றி­ருக்க  கடந்த 19ஆம் திகதி  மேற்­படி விகா­ரையின் விஹா­ரா­தி­பதி சுடு­நீர்க்­கி­ணறு ரஜ­மகா விகாரை என்ற முக­வ­ரி­யிட்டு கன்­னியா வெந்­நீ­ரூற்றுப் பகு­தியில் நான்கு ஏக்கர் காணியை வழங்­கும்­படி திரு­கோ­ண­மலை பிர­தேச செய­லா­ளரைக் கோரி­யுள்ள நிலை­யி­லேயே ஒரு ஏக்கர் நிலத்தை வழங்க நில அள­வீடு இன்று செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பாரம்­ப­ரியம் மிக்க இந்­நிலப் பகு­தியை அவ்­வாறு வழங்­கு­வது பௌத்த ஆதிக்­கத்தை மேலோங்கச் செய்யும் நட­வ­டிக்கை என்­பது மாத்­தி­ர­மல்ல பழை­மை­யான இந்து ஆல­யங்கள் இருந்த இடத்தை கப­ளீ­கரம் செய்யும் முயற்சி என தென்கயிலை ஆதீனம், கன்னியா ஆலய பரிபாலன சபை, ராவணசேனை அமை ப்பு மற்றும் சமூக அமைப்புகள் தமது கண் டனத்தைத் தெரிவித்துள்ளன.

இந்தக் கெடுபிடி நிலை தொடர்பாக கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோருக்கும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாகத் தெரி விக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47