கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு சிங்களவர்கள் உட்பட பத்து பேர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய காலத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களே கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
புதன் கிழமை தாக்கல் செய்துள்ள வழக்கில் குறிப்பிட்டநபர்கள் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட இராணுவமுகாம்கள் பொலிஸ் நிலையங்களில் தான் அனுபவித்த சித்திரவதைகளை முழுமையாக விபரித்துள்ளார்.
சூடாக்கப்பட்ட இரும்புத்துண்டுகளால் தாக்கினார்கள்,கேபிள்களால் அடித்தார்கள்,பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பைகளால் முகத்தை மூடி மூச்சுதிணறச்செய்தார்கள் என தனது பெயரை குறிப்பிடவிரும்பாத அவர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச ஆள்கடத்தல் சித்திரவதைகள் பாலியல் வல்லுறவு மற்றும் கப்பம் பெறுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட படையினரிற்கு பொறுப்பாகயிருந்தார் என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த துஸ்பிரயோகங்கள் இடம்பெற்ற காலத்தில் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜையென்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தங்களை சித்திவதை செய்தவர்கள் யார் என்பதையும் நேரடியாக குறிப்பிட்டுள்ள பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையின் முக்கிய விசாரணை அதிகாரியான நிசாந்த டி சில்வா இரு தடவைகள் தங்களை கொழும்பில் தாக்கினார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
நிசாந்த டி சில்வா என்னை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கினார் என பாதிக்கப்பட்ட ஒருவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
டீஐடியின் கொழும்பிற்கான பொறுப்பதிகாரியாக காணப்பட்ட பிரசன்ன டி அல்விஸ் என்பவரிற்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை வழக்கு தாக்கல் செய்தவர்கள் சுமத்தியுள்ளனர்.
அவர் சித்திரவதைகளிற்கு உத்தரவிட்டதுடன் சில வேளைகளில் நேரடியாக அதில் ஈடுபட்டார் அவரிற்கு கோத்தபாய ராஜபக்சவிடமிருந்து நேரடி உத்தரவுகள் கிடைத்தன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM