கோத்தபாயவிற்கு மேலும் நெருக்கடி- அமெரிக்க நீதிமன்றில் பலர் வழக்கு

Published By: Rajeeban

27 Jun, 2019 | 11:50 AM
image

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு சிங்களவர்கள் உட்பட பத்து பேர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய காலத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களே    கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

புதன் கிழமை தாக்கல் செய்துள்ள வழக்கில் குறிப்பிட்டநபர்கள்   கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட இராணுவமுகாம்கள் பொலிஸ் நிலையங்களில் தான்  அனுபவித்த சித்திரவதைகளை முழுமையாக விபரித்துள்ளார்.

சூடாக்கப்பட்ட இரும்புத்துண்டுகளால் தாக்கினார்கள்,கேபிள்களால் அடித்தார்கள்,பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பைகளால் முகத்தை மூடி மூச்சுதிணறச்செய்தார்கள் என தனது பெயரை குறிப்பிடவிரும்பாத அவர்கள் தமது  மனுவில் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச ஆள்கடத்தல் சித்திரவதைகள் பாலியல் வல்லுறவு மற்றும் கப்பம் பெறுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட படையினரிற்கு பொறுப்பாகயிருந்தார் என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த துஸ்பிரயோகங்கள் இடம்பெற்ற காலத்தில் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜையென்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தங்களை சித்திவதை செய்தவர்கள் யார் என்பதையும் நேரடியாக குறிப்பிட்டுள்ள பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையின் முக்கிய விசாரணை அதிகாரியான நிசாந்த  டி சில்வா இரு தடவைகள் தங்களை கொழும்பில் தாக்கினார் எனவும்  குறிப்பிட்டுள்ளனர்.

நிசாந்த டி சில்வா என்னை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கினார் என பாதிக்கப்பட்ட ஒருவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

டீஐடியின் கொழும்பிற்கான பொறுப்பதிகாரியாக காணப்பட்ட பிரசன்ன டி அல்விஸ் என்பவரிற்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை வழக்கு தாக்கல் செய்தவர்கள் சுமத்தியுள்ளனர்.

அவர் சித்திரவதைகளிற்கு உத்தரவிட்டதுடன் சில வேளைகளில் நேரடியாக அதில் ஈடுபட்டார் அவரிற்கு கோத்தபாய ராஜபக்சவிடமிருந்து நேரடி உத்தரவுகள் கிடைத்தன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01