(ஆர்.விதுஷா)
இலங்கை மின்சாரசபையின் பத்தாயிரம் கோடி ரூபா இழப்பை ஈடுசெய்வதற்காக மின்சார அலகு ஒன்றை 7 ரூபாவால் அதிகரிக்கும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் திட்டம் முறியடிக்கப்படும் என்று மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் தெரிவித்தது.
ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.எச். சஞ்சீவ தம்மிக்க கூறியதாவது ,
இலங்கை மின்சாரசபை பத்தாயிரம் கோடி ரூபா இழப்பை சந்தித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்வதற்காக மின்சார கட்டணத்தை ஒரு அலகுக்கு சுமார் ரூ 10 ரூபா வரை அதிகரிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையே மின்சாரத்துறை அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
2016 ஆம் ஆண்டிலிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்தமை காரணமாகவே மின்சாரசபை இந்த இழப்பைச் சந்தித்துள்ளது. தனியார் துறையினரிடமிருந்து 40 ரூபா என்ற அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால் மின்சார சபைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயமே.
இலங்கை மின்சாரச் சட்டத்தின்படி, மின்சாரம் வாங்கும்போது டெண்டர் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். ஆனால் முறைப்படி செயற்படாமல் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றது. ஊழல் மோசடி தொடர்பாக நாம் வெளிப்படையாவே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறாக மின்சாரக்கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படுமாயின் மின்சார பாவனையாளர்கள் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும். இது தொடர்பில் மின்சார பாவனையாளர்களை தெளிவுபடுத்த வேண்டியமை அவசியமாகும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இலங்கை மின்சார சபை 100 மெகாவோல்ட் மின்சாரப்பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக மின்வலுத்துறை அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்திருந்தார். இந்த நிலையில் , துருக்கிநாட்டு கப்பலிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யவதற்கான விலைமனுகோரப்பட்டதையடுத்து , தற்போது 200 மெகாவோல்ட் மின்சார தட்டுப்பாடு நிலவுவதாக அறிவித்திருந்தார். பின்னர் 470 மெகாவோல்ட் மின்சார தட்டுப்பாடு நிலவுவதாக மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் , பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 100 மெகாவோல்ட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதியையே வழங்கியுள்ளது. இருப்பினும் 100 மெகாவோல்ட்டிற்கும் அதிகமான அளவு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் . இவ்வாறான செயற்பாடுகளின் விளைவாக அலகிற்கு 7ரூபாவால் மின்சார கட்டணம் அதிகரிக்கும் நிலை ஏற்படும் . இவ்வகையான நடவடிக்கைகளையும் மின்வலு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
2016 ஆம் ஆண்டிலிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்தமையின் காரணமாகவே மின்சார சபைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறெனில் தனியார் துறையினரிடத்திலிருந்து 40 ரூபாவிற்கு அதிக பெறுமதியில் மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளனர். இலங்கை மின்சார சட்டத்திற்கு அமைய ஒப்பந்த முறையினூடாகவே மின்சார கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும். மாறாக இந்த ஒப்பந்தமுறைமையை பின்பற்றாமல் செயற்படுகின்றமையே அதற்கு காரணமாகும். இவ்வாறாக மின்சார சபையில் இடம் பெறும் ஊழல் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம்.
மின்சார சட்டத்திற்கு அமைய மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கே உள்ளது. இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டிலிருந்து அதிக விலையில் கொள்வனவு செய்யப்பட மின்சாரத்திற்கான அனுமதியை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியிருக்கவில்லை. இருப்பினும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி மின்சாரக்கொள்வனவுகள் இடம் பெற்றுள்ளன என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM