கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இராணு வத்தின் மருத்துவ பிரிவின் ஹன்டர் ரகவாகனம் ஒன்று யாழ். நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதியதில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
கிளிநொச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் இருந்து 7 இராணுவ வீரர்களுடன் மருத்துவப்பிரிவின் ஹன்டர்ரக வாகனம் கிளிநொச்சி நகர் பகுதியை நோக்கி பயணித்த போது, 55 ஆம் சந்தி அருகில் உள்ள ரயில் கடவையில், கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த யாழ். தேவி ரயிலில் மோதியுள்ளது.
ட்ரக் வண்டியானது ரயிலில் மோதுண்டதில் அதில் பயணித்த 7 வீரர்களில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்கள்.
மற்றைய இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிசிக்சைப் பெற்று வந்தவர்களுள் மற்றுமொரு இராணுவ சிப்பாய் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இராணுவத்தின் வைத்திய படைப் பிரிவு கோப்ரல் பி.ஜி.ஏ.என்.சி. ஜயசிறி, அந்த படைப் பிரிவின் வீரர்களான ட்ரக் வண்டி சாரதி எஸ்.என்.பி.கே. ஹேரத், ஆர்.எம்.எச். சஞ்ஜீவ, , இராணுவ விஷேட பாதுகப்பு படைப் பிரிவின் வீரர் கே.சிரிசேன, யுத்த உபகரணங்கள் தொடர்பிலான படைப் பிரிவின் வீரர் டி.எம்.எஸ்.பி. திசாநாயக்க ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
இராணுவ காலாற்படைப் பிரிவின் வீரர் பி.டி.எச். ரொஷான் மற்றும் கஜபா படைப் பிரிவின் ஆர்.எம்.எஸ். சாமர ஆகிய வீரர்களே படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இராணுவ ட்ரக் வண்டியின் சாரதி ரயிலைக் காணாது, கடவையால் ட்ரக்கை செலுத்த முற்பட்டமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணகளில் தெரியவந்துள்ள நிலையில், அங்கு இறந்த, காயமடைந்த அனைவரும் கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலையில் கடமையாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் பாரதிபுரத்தில் உள்ள இராணுவ வைத்திய படைப் பிரிவுக்கு நீர் எடுத்துச் செல்வதற்காக பயணித்துக் கொண்டிருந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM