கணவன் - மனைவி தகராறு ; வீட்டுக்கு தீ வைத்த கணவன் தலைமறைவு

Published By: Digital Desk 4

26 Jun, 2019 | 10:47 AM
image

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பாலமுனை கிராமத்திலுள்ள வீடொன்று தீ வைக்கப்பட்டதில் அந்த வீடும், வீட்டிலிருந்த உடமைகளும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, கணவனுக்கும் மனைவிக்குமிடையில் ஏற்பட்ட  வாய்த் தர்க்கத்தால் ஆத்திரமைடைந்த கணவன் தமது வீட்டுக்குத் தீயிட்டு எரித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கணவன் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடு தீப்பற்றி புகை மண்டலமாகத் தெரிவதை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதோடு தீயை அணைப்பதற்கும் முயற்சித்துள்ளனர்.

பொலிஸாரும் தகவலறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த போதும் வீடு ஏற்கெனவே முற்றாக எரிந்துள்ளது.

எனினும் அயல் பகுதிகளுக்கும் தீ பரவாமல் பொலிஸார் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44