மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ 

Published By: Vishnu

25 Jun, 2019 | 09:50 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தேசிய மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்காது. இதனை நோக்காகக் கொண்டு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு அரச கரும மொழிகள் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார். 

அரச கரும மொழிகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் தேசிய மொழிகளாகவும், ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் உள்ளன. இந்த மூன்று மொழிகளுமே மொழிக் கொள்கை சட்டத்திற்குள் உள்ளடங்குகின்றன. 

அதற்கிணங்க நாட்டில் அரச காரியாலயங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மும்மொழிகளிலும் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, எந்தவொரு அரச சேவை நிறுவனத்திற்கும் சென்று அனைத்து மொழிகளிலும் எழுத்து மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் பதிலைப் பெற்றுக் கொள்ளக் கூடிய உரிமை காணப்படுகின்றது. இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் கூட அந்த இலக்கை அடையக் கூடியதாகவுள்ளது. மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரிய பிரச்சினையாக தோற்றம் பெறாது என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48