(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக மஹிந்த தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பாதகமாக அமையாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இணைந்து கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாண்மை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் இரு கட்சிகளும் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது என்பது குறித்தே ஆராய வேண்டும். அதனை விடுத்து வீண் முரண்பாடுகளில் ஈடுபடக் கூடாது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை , ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள அக்கட்சியின் சம்மேளனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார் என்று எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது வரையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது.
பொதுஜன பெரமுன தரப்பில் வேட்பாளர் குறித்து உத்தியோக பூர்வ அறிவித்தல் விடுக்கப்படும் வரை கூட்டணி தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது.
அதே வேளை இரு தரப்பின் சார்பிலும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது என்பதே எமது நிலைப்பாடாகும்.இதில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் அது குறித்து ஆராயப்படும். அது வரையில் கூட்டணிக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM