வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான நேற்று வெளியிடப்பட்ட கடிதம் ஒன்று, வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.
தங்கொட்டுவ பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குறித்த கடிதத்தில் பிரதேச சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து, குறித்த பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் மக்கள் பொதுச் சந்தைப் பகுதிக்கு வருவதற்கு, ஏனைய மக்களும் வியாபார சமூகமும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், பிரதேச சபைத் தலைவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்பிரகாரம், தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM