அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளை வாடகைக்கு விடப்படுகிறது?; தோட்ட மக்கள் விசனம்

Published By: Digital Desk 4

26 Jun, 2019 | 02:13 PM
image

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் அரசாங்கத்தினால் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகளைச் சிலர் முறையற்ற விதத்தில் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் கடந்த 1.09.2016 அன்று வீட்டுத் தொகுதி ஒன்று மின்னொழுக்கு காரணமாகத் தீக்கிரையானது. இந்நிலையில் குறித்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் தற்காலிக கூடாரங்கள்  அமைத்துக் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் குறித்த 16 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அரங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் அந்த 16 குடும்பங்களுக்கும் புதிதாக வீடுகள் அமைத்துத் தரப்பட்டன.

இதையடுத்து குறித்த 16 குடும்பங்களில் சில குடும்பங்கள் மாத்திரமே குறித்த புதிய வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் மேலும் சிலர் குறித்த தற்காலிக கூடாரங்களிலேயே தங்கியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த தற்காலிக கூடாரங்களில் தங்கியிருப்பவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய வீடுகளைச் சிலருக்கு வாடகைக்கு விடுவதாகவும் சிலர் குறித்த வீடுகளை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீடுகள் எரிந்து அவதியுற்ற மக்களுக்கு அரசாங்கத்தினால் உதவிகள் வழங்கப்பட்ட நிலையில் அதனைச்  சிலர் முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதனால் அரசாங்கத்தில் எமக்குக் கிடைக்கும் சலுகைகள் இல்லாது போகும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த குடியிருப்புக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02
news-image

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு

2025-01-14 19:15:00