உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், அதிக பிடியெடுப்புகளை நழுவ விட்ட அணிகள் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா கடைசி இடத்திலும் இருக்கிறது.
இதில் இலங்கை அணியோ இரண்டே இரண்டு பிடியெடுப்புகளை மாத்திரம்தான் நழுவவிட்டுள்ளது.
நடப்பு உலகக் கிண்ணத்தில் இதுவைரியல் 31 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் மோசமான களத்தடுப்பு என்ற வகையில் அதிக பிடிகளை நழுவ விட்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்த பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டிருக்கிறது. அதில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது.
அந்த அணி இதுவரை மொத்தம் கிடைத்த 26 பிடிகளில் 14 பிடிகளை கோட்டை விட்டுள்ளது.
மொத்தமாக பார்த்தால் அடிப்படையில் இது 35 சதவிகிதமாகும். இங்கிலாந்தோ மொத்தம் கிடைத்த 42 பிடிகளில் 10 பிடிகளை கோட்டை விட்டிருக்கிறது.
தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இலங்கை அணி 15 பிடியெடுப்புகளில் இரண்டை மட்டுமே கோட்டைவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM