ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நோர்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்படையில் உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
ஆட்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்த தீவில் நவம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை இருளாகவே இருக்கும். அதேபோல் ஆண்டின் சில மாதங்கள் இதற்கு நேர் எதிரானதாக இருக்கும். அதன்படி தற்போது அந்த தீவில் சூரியன் மறையாமல் முற்றிலும் பகல் வேளையாகவே உள்ளது. கடந்த மாதம் 18 ஆம் திகதி நள்ளிரவிலிருந்தே இவ்வாறு காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 26ஆம் திகதி வரை 69 நாட்களுக்கு இவ்வாறான காலநிலையே நிலவவுள்ளதால் அத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தங்களது வழக்கமான நேரத்தைக் கடைப்பிடித்தலில் மிகுந்த சிக்கல்களை எதிர் கொண்டுள்ளனர். இதனால் தங்களது தீவை உலகின் முதல் நேரமற்ற வலயமாக அறிவிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சொம்மாரோயி தீவில் வசிக்கும் ஒருவரான கேஜெல் ஓவ் ஹெவ்டிங் கூறுகையில், 'இது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமானது. ஆனால் அதே நேரத்தில் இது மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயமும் கூட. கடிகார இயக்கத்தை நிறுத்திவைப்பதே இதற்கு சரியான தீர்வு' எனவும் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM