(நா.தனுஜா)
ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிக்கும் கருத்துக்களைப் பதிவிடும் பேஸ்புக், யூ டியுப் சமூகவலைத்தளங்களை முடக்கும் செயற்பாடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக சமூக வலைத்தளங்களில் காணப்படும் சுதந்திரத் தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் அபிப்பிராயங்களை மாற்றியமைத்து அரசாங்கத்திற்கு சாதகமான பின்னணியொன்றை உருவாக்கிக் கொள்ளும் வகையில் சமூகவலைத்தளங்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வது தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சிக்கும் கருத்துக்களைப் பதிவிடும் நபர்களின் தனிப்பட்ட பேஸ்புக் கணக்குகள் மற்றும் யூ டியுப்பை மையமாகக் கொண்டியங்கும் செய்தி ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடந்த சில வாரகாலமாகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமக்கு பலரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனை ஆராய்ந்து பார்த்ததிலிருந்து முடக்கப்பட்ட, சைபர் தாக்குதலுக்கு உள்ளான பேஸ்புக் கணக்குகள் என்பன ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்ச்சித்தமை வெளிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள அரச நிறுவனம் தற்போது அரசியல் செல்வாக்குகளின் அடிப்படையிலலேயே செயற்பட்டு வருகின்றது. அதேபோன்று பேஸ்புக் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும் பக்கச்சார்பான மொழிபெயர்ப்புப் பணியாளர்களும் தவறான புரிதலினாலும் இவ்வாறு பலரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது.
இதனூடாக அதிகளவிலானோர் பயன்படுத்தும் பேஸ்புக் மற்றும் யூ டியுப் ஆகிய சமூக வலைத்தளங்களை எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு சாதகமான முறையில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2015 இல் முந்தைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பிரசாரங்களை இந்த சமூகவலைத்தளங்களில் ஊடாக முன்னெடுத்த இளைஞர், யுவதிகளுக்கு இலவல வை-பை மற்றும் கூகுள் பலூன் வசதிகளை வழங்குவதாக உறுதியளித்த இந்த நல்லாட்சி அரசாங்கம், இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக சமூக வலைத்தளங்களில் காணப்படும் சுதந்திரத் தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளமை குறித்து நாம் எமது கடுமையான கண்டனத்தை வெளியிடுகிறோம்.
அதேபோன்று நாட்டு மக்களின் அபிப்பிராயங்களை மாற்றியமைத்து அரசாங்கத்திற்கு சாதகமான பின்னணியொன்றை உருவாக்கிக் கொள்வதுடன், எதிரணியின் கொள்கைகளை பின்தள்ளும் வகையில் சமூகவலைத்தளங்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வது குறித்து பேஸ்புக் நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM